காலம் காட்டும் கல்!!
கிளாசிக்கல் கிளாக் என்ற வரிசையில்
வெள்ளைக்காரன் மணல் கடிகாரம்
கண்டுபிடித்து பயன்படுத்தினான்!
தமிழன்
சூரியனை வைத்து கடிகாரம்
கண்டிபிடித்து பயன்படுத்தினான்!
அவன்
மண்ணை பார்த்து சிந்தித்தபோதே!
விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்!
இன்னும்
கோவில் கோபுரத்தின் நிழலை வைத்தும் நேரம்
அறிந்த தமிழன் ஒரு கருங்கல்
வைத்து துள்ளியமான நேரம் அறிந்திருக்கிறான்.
இதற்கு ஆதாரமான இன்னும்
நின்று கொண்டிருக்கிறது காலம் காட்டும் கல்!
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற ஊரில்
உள்ளது வழித்துணைநாதர் – மார்கபந்தீஸ்வரர்
கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில்,
‘காலம் காட்டும் கல்’ இருக்கிறது. அர்த்த
சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12
வரையும் எண்கள் அந்த கல்லில்
செதுக்கப்பட்டுள்ளன.
மேற்புறம் உள்ள பள்ளத்தின்
வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின்
நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான்
அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.
இன்னும் வேலை செய்யும் இந்த அரிய கடிகாரக்
கல் சங்ககாலத் தமிழனின் தொழில்
நுட்பத்துக்கு நற்ச்சான்று!...
No comments:
Post a Comment